Ramadoss about Liquor sales: தமிழகத்தில் அதிகரித்திருப்பது சாதனையல்ல.. அவமானம்: ராமதாஸ்

சென்னை: Dr. Ramadoss said that the increase in alcohol sales is not an achievement in any way, but a shame. மது விற்பனை அதிகரித்திருப்பது எந்த வகையிலும் சாதனையல்ல, அவமானம் என டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களாக ரூ.464.21 கோடி மதிப்பிலலான மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. அதன்படி, அக்டோர் 23ம் தேதி சென்னை-ரூ. 51.52 கோடி, திருச்சி – ரூ. 50.66 கோடி,சேலம் ரூ. 52.36 கோடி, மதுரை ரூ. 55.78 கோடி, கோவை-ரூ. 48.47 கோடி என மொத்தமாக ரூ. 258.79 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

இந்த நிலையில் மது விற்பனை அதிகரித்திருப்பது சாதனையல்ல, வேதனை என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாட்டில் தீப ஒளி திருநாளுக்கு முந்தைய நாளான நேற்று ஒரே நாளில் ரூ. 259 கோடிக்கு மது விற்பனையாகியிருக்கிறது. தீப ஒளி நாளான இன்று ரூ.300 கோடிக்கும் கூடுதலாக மது விற்பனை செய்யப்படக்கூடும் என்று டாஸ்மாக் தொழிற்சங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த ஆண்டு தீபஒளி திருநாளுக்கு முதல் நாளில் ரூ.205 கோடிக்கும், தீப ஒளி நாளில் ரூ. 225 கோடிக்கும் மது விற்பனையான நிலையில், அதை விட இந்த ஆண்டு அதிகமாக மது விற்பனையாகியிருக்கிறது. மது விற்பனை அதிகரித்திருப்பது எந்த வகையிலும் சாதனையல்ல…. அவமானம்.

இரு நாட்களில் மதுவுக்காக செலவிடப்பட்ட சுமார் ரூ.600 கோடி ஆக்கப்பூர்வமாக செலவிடப்பட்டிருந்தால், லட்சக்கணக்கான ஏழைக் குடும்பங்களின் குழந்தைகளுக்கு புத்தாடைகளும், இனிப்புகளும் கிடைத்திருக்கும். லட்சக்கணக்கான குடும்பங்களின் மகிழ்ச்சியை மது பறித்திருப்பது வேதனையானது.

தீப ஒளி, பொங்கல் போன்ற திருவிழாக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட வேண்டுமானால் அந்த காலத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும். அடுத்தக்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகளை நிரந்தரமாக மூடி மது விலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.