மும்பை: (Roger Binny Sourav Ganguly) உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் பதவிக்கு கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத் தலைவர் ரோஜர் பின்னி செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறுகையில், 1983 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் உறுப்பினரான 67 வயதான ரோஜர் பின்னி பிசிசிஐ தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) தலைவர் பதவிக்கு ரோஜர் பின்னி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். நான் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன். செயலாளர் பதவிக்கு ஜெய் ஷாவும், பொருளாளர் பதவிக்கு ஆஷிஷ் ஷெல்லரும், இணைச் செயலாளர் பதவிக்கு தேவ்ஜித் சைகியாவும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக ராஜீவ் சுக்லா தெரிவித்தார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தலைவர் பதவிக்கு ரோஜர் பின்னியைத் தவிர வேறு யாரும் இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. வேட்புமனு தாக்கல் செய்ய புதன்கிழமை கடைசி நாளாகும், இதுவரை ரோஜர் பின்னி மட்டுமே களத்தில் உள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) ஆண்டு பொதுக்கூட்டம் வரும் அக்டோபர் 18-ம் தேதி மும்பையில் நடைபெற்று அங்கு தேர்தல் நடைபெறவுள்ளது.
பிசிசிஐயின் தற்போதைய பொருளாளராக இருக்கும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரின் சகோதரர் அருண் துமால் ஐபிஎல்லின் புதிய தலைவராக இருப்பார். கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளரான பிரிஜேஷ் படேல் இதுவரை ஐபிஎல் தலைவராக இருந்தார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தலைவர் சவுரவ் கங்குலியின் பதவிக்காலம் முடிவடைந்ததால், ஐசிசி தலைவர் பதவிக்கு கங்குலி போட்டியிட வாய்ப்புள்ளது (Ganguly is likely to contest for the post of ICC president). இதனால் காலியாக உள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தலைவர் பதவிக்கு ரோஜர் பின்னி போட்டியிட்டுள்ளார். 2019 ஆம் ஆண்டு கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக ரோஜர் பின்னி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தற்போதைய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா (BCCI Secretary Jai Shah) மற்றொரு முறை செயலாளராக தொடர விரும்புகிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என தெரிகிறது.