Mega vaccination drive tn : கொரோனா தொற்றின் 2 ம் அலை தமிழகத்தை வெகுவாக தாக்கியது.இதன் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது.இந்த ஊரடங்கு காலத்தில் தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.தமிழகத்தில் இதுவரை வெற்றிகரமாக கெரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று அதில் நிறைய மக்கள் இலவச தடுப்பு ஊசிகளை செலுத்தி கொண்டனர்.Mega vaccination drive tn
தமிழகத்தில் வரும் சனிக்கிழமை (22-1-2022) 50,000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இது தமிழகத்தில் நடைபெறும் 19 வது மெகா தடுப்பூசி முகாம்.இந்த மெகா தடுப்பூசி முகாம்களில் மக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்கின்றனர்.
கொரோனா பரவலை தடுக்க கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஜனவரி 31ஆம் தேதி வரை நடைமுறைப்படுத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று மருத்துவமனைகள், மருந்தகங்கள் செயல்படும்,பெட்ரோல் பங்குகள் செயல்படும் உணவகங்களில் பார்சல் வாங்கிக்கொள்ள அனுமதி.திருமண உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்களுக்கு பத்திரிக்கைகளுடன் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : natural tips : நீளமான கூந்தல் வேண்டுமா !