கொரோனா தொற்றின் 2 ம் அலை தமிழகத்தை வெகுவாக தாக்கியது.இதன் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது.இந்த ஊரடங்கு காலத்தில் தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.
தமிழகத்தில் ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.தமிழகத்தில் இதுவரை வெற்றிகரமாக கெரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று அதில் நிறைய மக்கள் இலவச தடுப்பு ஊசிகளை செலுத்தி கொண்டனர் இதை ஊக்குவிக்கும் வகையில் பல பரிசுகள் வழங்கப்பட்டன.14th mega vaccination drive
நாளை தமிழகத்தில் நடைபெறும் 14-வது மெகா தடுப்பூசி முகாம் ஆகும். இந்த முகாமில் சுமார் 2 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.தடுப்பூசி போடும் பணியில் ஈடுபடக்கூடிய ஊழியர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது.
மேலும் சென்னை மாநகராட்சியில் நாளை 1600 மையங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் சென்னை மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றன.