தமிழகத்தில் மேலும் 5,595 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் மேலும் 5,595 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,08,885-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 67 பேர் பலியான நிலையில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,653-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 5,52,938- பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 46,294- பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here