தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு செப்டம்பர் 1 முதல் தடுப்பூசி !

100 சதவீதம் இலக்கை அடைந்த அந்தமான் மற்றும் நிக்கோபார்

கொரோனா தொற்றின் 2 ம் அலை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன.இந்நிலையில்,இந்த ஊரடங்கில் தொற்று எண்ணிக்கை குறைய தொடங்கியுள்ளது.அதனால் கல்லூரிகள் திறக்கப்படவுள்ளன.

கல்லூரிகளை திறக்கும் போது மாணவர்கள் சமூக இடைவேளை மற்றும் கொரோனா நெறிமுறைகளை தவறாமல் பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

சென்னை மாவட்டத்தில் 90.11 சதவீத ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 112 கல்லூரிகளுக்கும், நேரில் சென்று மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி வரும் செப்டம்பர் 1ந்தேதி தொடங்கும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.