தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு..நகை கடன் தள்ளுபடி !

தமிழ்நாட்டிற்கு '4.0' திட்டம் : இளைஞர்களை மையப்படுத்தி புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறது தமிழக அரசு

தமிழ்நாட்டில் கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் வரை அடமானம்பெற்று வழங்கப்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அரசு அறிவித்தது.

நகைக்கடன் வழங்கப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.இந்த அறிவிப்பு ஏழை மக்கள் பயன்பெற அறிவிக்கப்பட்டது.ஒரே குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் பல கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

தற்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் நகைக்கடன் பெற்றிருந்தாலும், 5 சவரனுக்கு மேலான கடனுக்கான தொகையை வசூல் செய்ய வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.

தற்போது ஒரே குடும்பத்தினர் பெயரில் 5 சவரனுக்கு மேல் பல்வேறு மாவட்டங்களில், பல்வேறு வங்கிகளில் பெறப்பட்ட கடன்களை வசூலிக்கும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சூப்பர்..தமிழகத்தின் கோவளம், ஈடன் பீச்களுக்கு நீலக்கொடி !