அக்.1ஆம் தேதி முதல் மாணவர்கள் விரும்பினால் பள்ளிகளுக்குச் செல்லலாம்

அக்டோபர் 1ஆம் தேதி முதல் மாணவர்கள் விரும்பினால் பள்ளிகளுக்குச் செல்லலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், ஏற்கனவே மத்திய அரசு ஒன்பதாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பெற்றோர் அனுமதியுடன் மாணவர்கள் தங்கள் பாடங்களில் உள்ள சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள பள்ளிகளுக்கு வரலாம் என்று அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டி அதேபோல தமிழகத்திலும் வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் பாடங்களில் உள்ள சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள பள்ளிகளுக்கு வரலாம் என்றும் அறிவித்துள்ளது.

அரசு அரசு உதவி பெறும் பள்ளிகள் தனியார் பள்ளிகள் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் போது 50 சதவிகித ஆசிரியர்களை அனுமதிக்கலாம் என்றும் ஏற்கனவே அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு வெளியே உள்ள பள்ளிகளை மட்டுமே திறக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here