நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர்,வேறு ஒருவரை முதல்வராக அறிவிப்பேன் என ரஜினிகாந்த் கூறியதில் இருந்து அவர் மீதான முரண்பாடு நீங்கியது. புகழ்ச்சியை மட்டுமே பார்த்த ரஜினியால் நாங்கள் சந்திப்பதை போல் அவர் சொற்களை தாங்க முடியாது. சில கட்சிகளுக்கு கொள்கை முரண் இருந்தாலும் கூட்டணி வைத்துக் கொள்கின்றன.
வருகிற தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவர் என கூறியுள்ளார். மேலும் மக்களிடம் மட்டுமே நாங்கள் கூட்டணி வைத்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.