Actress Aindrila Sharma: மாரடைப்பு காரணமாக காலமானார் வங்காள நடிகை ஐந்த்ரிலா சர்மா

கொல்கத்தா: Actress Aindrila Sharma: மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் ஐந்த்ரிலா சர்மா(24). இவர் ‘ஜுமுர்’ என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். பின்னர் ‘அமி திதி நம்பர் 1’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

அண்மையில் மூளை பாதிப்பால் பக்கவாதம் ஏற்பட்டு கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் (She suffered a stroke and was admitted to a private hospital in Kolkata). அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் மருத்துவமனையில் மாரடைப்பு ஏற்பட்டு அவர் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

அவரின் மறைவுக்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஐந்த்ரிலா சர்மா, ஏற்கெனவே 2 முறை புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டு வந்தவர் (She has already recovered from cancer twice) என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக அவரின் காதலர் சப்யசாச்சி சவுத்ரி சமூக ஊடகங்களில் (Sabyasachi Chaudhary on social media) ஐந்திரிலாவுக்காக அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொண்ட நிலையில் இந்த திடீர் மறைவு செய்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பெர்ஹாம்பூரில் பிறந்த நடிகை ஐந்த்ரிலா ஷர்மா ஜுமுர் என்ற தொலைக்காட்சி சீரியல் மூலம் ரசிகர்களிடத்தில் அறிமுகமானார். தொடர்ந்து மகாபீத் தாராபீத், ஜிபோன் ஜோதி (Mahapeeth Tarapeeth, Jibon Jyoti) மற்றும் ஜியோன் கதி போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றது மட்டுமல்லாமல் அமி திதி நம்பர் 1 மற்றும் லவ் கஃபே போன்ற திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார்.